search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் மாயம்"

    • திருமங்கலம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே யுள்ள சாத்தங்குடி யை சேர்ந்தவர் ராஜாராம் (வயது30). கோவையில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பேச்சி யம்மாள்(24). இவர்களுக்கு 3வயதில் பெண் குழந்தை உள்ளது. ராஜாராம் கோவையில் வேலை பார்ப்பதால் வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார்.

    இந்த நிலையில் அவர் ஊருக்கு வந்தபோது குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பேச்சியம்மாள் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி ப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ராஜாராம் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண்ணின் கணவர் திருநங்கையுடனான பழக்கத்தை கைவிட வில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய போதுவை என்ற இடத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு மகனும், 3 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் கணவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருநங்கை ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிற்கு வராமல் திருநங்கையுடன் வசித்து வந்தார். இது குறித்து இளம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் நாகராஜை அழைத்து அறிவுரை வழங்கி அவரது மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னரும் இளம்பெண்ணின் கணவர் திருநங்கையுடனான பழக்கத்தை கைவிட வில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது 3 மாத பெண் குழந்தையுடன் மாயமானார்.

    அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் கிடைக்க வில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் 3 மாத கைக்குழந்தையுடன் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • வீட்டிலிருந்து மாலதி வெளியே சென்று உள்ளார்.
    • மனைவி குறித்து எந்த ஒரு தகவல் இல்லாததால் முத்துமணி மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துமணி. இவரது மனைவி மாலதி (24).

    முத்துமணி கோவையில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடமாக திண்டுக்கல் வெள்ளப்பெட்டியில் மனைவியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி விஜயமங்கலத்திற்கு தனது மனைவியுடன் முத்துமணி வந்தார். முத்துமணி வேலைக்கு செல்லும் நேரத்தில் மாலதி யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டிலிருந்து மாலதி வெளியே சென்று உள்ளார். முத்துமணியும் அவரது மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று இருப்பார் என நினைத்து அவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.

    இந்நிலையில் ஒரு மாதம் ஆகியும் மனைவி குறித்து எந்த ஒரு தகவல் இல்லாததால் முத்துமணி மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி மாமியார் வீட்டிற்கும் வரவில்லை என தகவல் தெரிய வந்தது.

    இதனையடுத்து முத்துமணி உடனடியாக இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மனைவியை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

    அதன் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இவருக்கு காது சரியாக கேட்காமல் இரவில் பார்வைகுறைபாடும் இருந்து வந்துள்ளது.
    • சம்பவ த்தன்று தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகள் ரதிஷாஸ்ரீ(18). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு காது சரியாக கேட்காமல் இரவில் பார்வைகுறைபாடும் இருந்து வந்துள்ளது.

    சம்பவ த்தன்று தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் செல்வி கொடுத்த புகாரி ன்பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அன்பரசன் (வயது 26). இவரும், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் அடுத்த நைனூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பூர்ணிமா (20) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.
    • புதிய பஸ் நிலையத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார்த்திக் மற்றும் பூர்ணிமாவை காணவில்லை.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் குண்ட நாற்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 26). இவரும், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் அடுத்த நைனூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பூர்ணிமா (20) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக திருப்பூரிலிருந்து பஸ்சில் பூர்ணிமா ஏறினார். அப்போது அவரை அன்பரசன் அவரது நண்பர் மற்றும் கார்த்திக் ஆகியோர் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அன்பரசன் செல்போன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு கார்த்தி மற்றும் பூர்ணிமா ஆகியோரை புதிய பஸ் நிலையத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார்த்திக் மற்றும் பூர்ணிமாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பரசன் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து மாயமான ஆந்திர மாநில இளம்பெண்ணையும் வாலிபரையும் தேடி வருகிறார்.

    • தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி காளியப்ப நகரைச் சேர்ந்தவர் சக்திவேல்(27). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயசூர்யா (22). இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார்.

    இந்நிலையில், தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால், விரக்தியடைந்த ஜெயசூர்யா தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பணி முடிந்து வீடு திரும்பிய சக்திவேல், மனைவி மற்றும் மகன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீஸ் நிலையத்தில் நேற்று சக்திவேல் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மாலையில் நீண்டநேரமாகியும் வீடு திரும்பிவரவில்லை.
    • எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் ஜீவிதா மாயமானது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தம்புடு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்.

    இவரது மகள் ஜீவிதா (வயது23). இவர் பி.எஸ்.சி. படித்து முடித்து விட்டு பாலக்கோடுவில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். ஆனால் மாலையில் நீண்டநேரமாகியும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன ஜீவிதாவின் பெற்றோர்கள் அவரை பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் ஜீவிதா மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜீவிதாவின் தாய் ஜோதி பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜீவிதாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • மருத்துவ மனைக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை.
    • மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி நித்யா (வயது20).

    சம்பவத்தன்று தனியார் மருத்துவ மனைக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை.பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்த மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 12-ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கூலிக்கொட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி. இவர் படித்து முடித்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    கடந்த 12-ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை. இவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நிகழ்ச்சிக்காக சுமார் 7 பவன் தங்க நகையுடன் சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை.
    • அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் இவருடைய மனைவி சரிதா (வயது 20). இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.

    இந்நி லையில் உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சுமார் 7 பவன் தங்க நகையுடன் சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது மாமியார் மாரண்டஅள்ளி போலீசில் அட்டை புழுக்கை கிராமத்தை சேர்ந்த வேணுகோபால் என்கிற தினேஷ் என்பவர் கடத்திச் சென்று இருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, வட்டமலை அருகே உள்ள தையல் பயிற்சி பள்ளியில், தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.
    • நேற்று முன்தினம் மொபட்டில் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 47). விசைத்தறி தொழிலாளி. இவரது 16 வயது மகள் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, வட்டமலை அருகே உள்ள தையல் பயிற்சி பள்ளியில், தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.

    நேற்று முன்தினம் மொபட்டில் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணாததால் இதுகுறித்து கதிர்வேல், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்ற பண்ருட்டி இளம் பெண் மாயமானார்.
    • கடலூர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எஸ்.கே.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மகள் வினிதா (19). இவர் பிளஸ்- 2 படித்துவிட்டு வீட்டில்இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடலூர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் இதுகுறித்து பண்ருட்டிபோலீசில் புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் சந்திரன் இதுகுறித்துவழக்கு பதிவு செய்து காணாமல் போன வினிதாவை தீவிரமாக தேடி வருகிறார்.

    ×